#SaveyourlungsDilli
உலகிலேயே மிகவும் மாசடைந்த 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளது, இதில் நாட்டின் தலைநகரான புதுடெல்லியும் அடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது. நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் ஒவ்வாமை ஊக்கிகள் மற்றும் மாசுகள் அளவு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், டெல்லி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 34% அளவுக்கு ஆஸ்த்மா, சிஓபீடி மற்றும் பிராங்கைடிஸ் போன்ற பல்வேறு சுவாசப் பிரச்சனைகளுக்கு உள்ளாகி இருப்பதில் உண்மையில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அந்நோய்களை கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருப்பினும், சுவாசப் பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமை ஊக்கிகள் மற்றும் மாசுகள் எப்படி ஒருவரின் நுரையீரல்களை பாதிக்கின்றன என்ற விழிப்புணர்வு இன்னமும் மிக குறைவாகவே உள்ளது.
மக்கள் இதனை புரிந்து கொள்ளும் தேவை அதிகரித்து வருவது மற்றும் சுவாசப் பிரச்சனைகளின் வகைகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சையை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை ப்ரீத்ஃப்ரீ (சிப்லாவின் பொது சேவை முனைப்பு) புரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஆகவே, உங்களுக்கு அனைத்து தகவலும் கிடைக்கவும் மற்றும் உங்களுக்கு தேவைப்படும் ஆதரவை பெறவும் நாங்கள் ‘#Saveyourlungsdilli’ என்றழைக்கப்படும் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளோம். இந்த இயக்கத்துடன் சேர்ந்து, ப்ரீத்ஃப்ரீ தனது முதல் ஹெல்ப்லைன்-ஒன்றையும் தொடங்கியுள்ளது, இது உங்களுக்கு 24 மணிநேரமும் இலவசமாக ஆதரவு மற்றும் தகவலையும் தருகிறது.
உங்களுக்கு ஒரு சுவாசப் பிரச்சனை அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு இருக்கிறது அல்லது உங்களுக்கு அனேகமாக இருக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், இந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு அழைத்து உங்கள் பகுதிக்கு அருகில் இலவசமாக நுரையீரல் பரிசோதனை முகாம் ஒன்றை அமைக்குமாறு கோரலாம்.
ஆகவே, #Saveyourlungsdilli மூலமாக உங்கள் நுரையீரல்களை காத்து மற்றும் சுலபமாக சுவாசிக்க இதுதான் சரியான தருணம்.